ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 28.01.2017 அன்று சுய உதவி குழுவினருக்கு "கைவினை பொருட்கள்" தயாரித்தல் குறித்து ஒரு நாள் பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை கல்லூரி முதல்வர் சுரேந்திரன் பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த பயிற்சி திட்டத்தில் சுய உதவி குழுவினைச் சேர்ந்த 20பேர் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மேலும், ஸ்ரீ நாராயண குரு கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் "உலக தனியுரிமை நாள்" ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் சந்தியா வெங்கட் அலுவலக இணைப்பாளர் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன் மற்றும் கார்த்திகேயன் துணை மேலாளர், கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.